Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியில் ஓவியப் போட்டி

நவம்பர் 25, 2023 11:27

ராசிபுரம்: ராசிபுரம், ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்களுக்கான ஓவியப்போட்டி அண்மையில் நடைபெற்றது.

சித்திரம் பவுன்டேஷன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்ட அளவில் சுமார் 70 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் 3-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர்.

காய்கறிகள், பழங்கள், மருதம், நெய்தல் போன்ற நிலக்காட்சிகள், பொங்கல், தீபாவளி விழாக்காலங்கள் போன்றவை குறித்த ஒவியங்கள் மாணவர்கள் வரைந்தனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சித்தரம் பவுன்டேஷன் தலைவர் ஜி.ஆர். மோகன் தலைமை வகித்தார். செயலர் சிவக்குமார் வரவேற்றார்.

இதில் ஜேசிஐ அமைப்பின் ராசிபுரம் கிளைத் தலைவர் ஜெ.ராஜேஸ், செயலர் கார்த்திக், வித்யாமந்திர் பள்ளி செயலர் வி.சுந்தரராஜன், முதல்வர்  பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற பதக்கங்கள், கோப்பைகள் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்